Skip to content
Home » திருச்சியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

  • by Senthil

திருச்சி, முசிறி அருகே உள்ள ஆமூர் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் கந்தன். இவரது மகன் முரளி ( 25), இவர் சிறுகனூர் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் புதிதாக கட்டப்படட்டு வரும் தங்களது வீட்டு கட்டிடத்திற்கு நேற்று காலை தண்ணீர் விடுவதற்காக மோட்டார் சுவிட்சை  அழுத்தியுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து முரளி சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த முரளியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். முரளியை பரிசோதித்த டாக்டர்கள்  அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!