Skip to content
Home » மனைவி உட்பட 4 குழந்தைகளை வெட்டிக்கொன்றுவிட்டு தந்தை தற்கொலை….

மனைவி உட்பட 4 குழந்தைகளை வெட்டிக்கொன்றுவிட்டு தந்தை தற்கொலை….

  • by Senthil

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள காஞ்சி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி. இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு 3 மகள்கள் 1 மகன் என மொத்தம் 4 குழந்தைகள் உள்ள நிலையில், அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி, 3

திருவண்ணாமலை அருகே மனைவி, 4 குழந்தைகள் வெட்டிக்கொலை- விவசாயி தூக்கிட்டு தற்கொலை

மகள்கள், ஒரு மகன் என மொத்தம் ஐந்து பேரையும் பழனி வெட்டிக்கொன்று அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மனைவி வள்ளி (37), மகள்கள் திரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6) மகன் தனுஷ் (4), பழனி என 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இக்கொடூர கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அதில் படுகாயமடைந்த ஒரு பெண் பிள்ளை மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!