Skip to content
Home » புதுமனைவியை காதலனிடம் ஒப்படைத்த கணவர்…

புதுமனைவியை காதலனிடம் ஒப்படைத்த கணவர்…

ஜார்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள மானாடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிலா கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் சிங் என்பவருக்கு கடந்த மே 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.அவர் துர்க்கடியை சேர்ந்த பிரியங்கா குமாரி என்பவரை மணந்தார்.இவர்களின் திருமணம் கிராமமே வியக்கும் வண்ணம் பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரியங்கா குமாரி அவரது கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா விஸ்வகர்மா என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் சில காரணங்களால் இவர்களது திருமணத்திற்கு குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை.

இவர்களது காதலை ஏற்றுகொள்ளாத அவரது குடும்பத்தினர் பிரியங்காவை மனோஜ் குமார் சிங்கிற்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணத்திற்கு பிறகும் பிரியங்காவால் காதலன் ஜிதேந்திராவை மறக்க முடியவில்லை. தினமும் போனில் பேசினார். வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். பிரியங்காவை அழைத்துச் செல்ல ஜிதேந்திரா கிலா கிராமத்திற்கு வந்தார்.
திட்டமிட்டு இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். இதை கிராம மக்கள் சிலர் பார்த்து இருவரையும் பிடித்தனர். உடனடியாக பிரியங்கா கணவர் மனோஜ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து எதுவும் பேசவில்லை. மனைவியை காதலனிடம் ஒப்படைத்தார். மனோஜ் குமார் சிங் பிரியங்காவின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேசனிற்கு சென்றது. யாரும் புகார் அளிக்காததால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!