Skip to content
Home » திருச்சி மாநகரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் சப்ளை ரத்து…

  • by Senthil

திருச்சி சார்க்கார் பளையம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி நாளை (22ம் தேதி) நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் மண்டலம் -2க்குட்பட்ட விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் , கல்லுக்குழி, சுந்தராஜபுரம் , காஜாமலை புதியது , மண்டலம் 3க்குட்பட்ட அரியமங்கலம், உக்கடை , தெற்குஉக்கடை , ஜெகநாதபுரம் , மலையப்பநகர், ரயில்நகர் , மகாலெட்சுமி நகர் , முன்னாள் ராணுவத்தினர் காலனி, எம்.கே.கோட்டை செக்ஸன் ஆபிஸ் , நாகம்மை வீதி , எம்கே. கோட்டை நூலகம் , பொன்னேரிபுரம்புதியது , பொன்னேரிபுரம்பழையது , பொன்மலைப்பட்டி , ஐஸ்வர்யாநகர் , மண்டலம் -4க்குட்பட்ட ஜே.கே. நகர் , செம்பட்டு , காமராஜ்நகர் , எல்ஐசி சுப்பிரமணிய நகர் , தென்றல்நகர் , தென்றல்நகர் E.B காலனி , வி.என் . நகர் , கே.கே நகர் , சுப்பிரமணிய புரம் , ஆனந்த நகர் , கே.சாத்தனூர் , பஞ்சப்பூர் , அம்மன் நகர் , கவிபாரதிநகர் , எடமலைப்பட்டிபுதூர் புதியது , காஜாமலை பழையது , கிராப்பட்டி புதியது , கிராப்பட்டி பழையது , அன்புநகர் பழையது , அன்புநகர் புதியது , ரெங்காநகர் ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெறாது .
மறுநாள் 24ம் தேதி வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் . எனவே பொது மக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!