Skip to content
Home » விதை நெல் திருவிழா… உழவர்கள் பிரச்சனை குறித்து கலந்தாய்வு….

விதை நெல் திருவிழா… உழவர்கள் பிரச்சனை குறித்து கலந்தாய்வு….

கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டம், சேரப்புழா கிராமத்தில் 10வது ஆண்டு பாரம்பரிய விதை நெல் திருவிழா நடந்தது. இதில் சம்யுத்த கிசான் மோரச்சா முன்னணி தலைவர் ராகேஷ் திக்காயத், தெலுங்கானா மாநில உழவர்கள் தலைவர் நரசிம்ம ரெட்டி வெங்கடேஸ்வராவ் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, கர்நாடக ராஜ்ய நஞ்சுண்ட சாமி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புச் செயலாளர் பசவராஜ் .கேரள மாநில உழவர் சங்க தலைவர் ஜான், கேரள மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் சுவாமிமலை சுந்தர விமல் நாதன், இயற்கை விவசாயி ஏராகரம் சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உழவர்கள் பிரச்சனை குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!