Skip to content
Home » விருதுநகரில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு….

விருதுநகரில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு….

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு வரும் 27ஆம் தேதி முதல் இலவச நேரடி பயிற்சி நடைபெறவுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் 2023 ஆம் ஆண்டிற்கான சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆப் போலீஸ் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) ஆகிய பணிக்காலியிடங்களுக்கான தேர்வுவ அறிவிக்கப்படவுள்ளது.

கல்வித்தகுதி                 :  பட்டப்படிப்பு தேர்ச்சி ஆகும்.
வயது வரம்பு                 :  வயது உச்ச வரம்பு 30 (வயது தளர்வு உண்டு)

virudhunagar

இது குறித்து மேலும் விவரங்களை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக 27.02.2023 முதல் நேரடி பயிற்சியாக நடைபெற இருக்கிறது. மேற்காணும் தேர்வுக்கு நேரடியாக பயிற்சி பெற விரும்பும் மனுதாரர்கள் https://t.me/vnrstudycircle என்ற டெலிகிராம் மூலமாகவோ, studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு, ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!