சூப்பர் குட் பிலிம்சிலும், பல்வேறு இயக்குனர்களிடமும் இணை இயக்குனராக பணியாற்றி, அதன் மூலம் நடிகர் ஆனவர் சுப்பிரமணியன். இவர் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையை சேர்ந்தவர். காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் 100 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். முண்டாசுப்பட்டி , காதல் கடந்து போகும், ரஜினி முருகன், காலா, பாபநாசம், பரியேறும் பெருமாள், சூரரைப் போற்று, ஜெய்பீம், வாரிசு உள்ளிட்டப் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
சுப்பிரமணியன் முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்துள்ள படம் வெள்ளிமலை. இவர் பாபநாசத்திற்கு வந்திருந்தப் போது தந்தப் பேட்டி…. பழங்காலத்தில் உயிர் கொல்லி நோய்களைக் கூட இலைகளின் சாற்றால் குணப்படுத்தும் பூமி என்று தமிழ்நாடு போற்றப்படுகிறது. துறவி போகர் போன்ற சித்தர்கள் வாழ்ந்த தமிழ்நாடு அவர்களின் மருந்தியல் இன்றளவிலும் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. வெள்ளிமலை திரைப்படம் சித்தர்களின் தனித்துவத்தையும், மனம் ,உடல் மற்றும் ஆன்மாவின் நல்ல ஆரோக்கியத்திற்கு அவர்களின் பங்களிப்பை போற்றும் ஒரு சமூக அக்கறை உள்ள ஒரு பொழுதுபோக்கு படைப்பாகும். ஒரு அழகான மலை கிராமத்தின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக ஒரு மருத்துவரிடமும், எந்தச் சிகிச்சையையும் எடுக்காமல் வாழும் கிராமவாசிகளை சுற்றி கதை நகர்கிறது. வெள்ளிமலை திரைப்படத்தின் இயக்குனர் ஓம் விஜய் சிறப்பான முறையில் படத்தினை உருவாக்கி இருக்கிறார் என்றார்.