Skip to content
Home » வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி வெட்டி கொலை….3 பேருக்கு ஆயுள் தண்டனை…

வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி வெட்டி கொலை….3 பேருக்கு ஆயுள் தண்டனை…

திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் சரகம் ஆரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி பாண்டியன் (50). இவர் வளரும் தமிழகம் கட்சி திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி மாலை இவர் எடையூரிலிருந்து ஆரியலூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கேந்தி சுடுகாடு அருகே சிலர் இவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ரஜினி பாண்டியனை முன்விரோதம் காரணமாக வட சங்கேந்தியைச் சேர்ந்த ராஜேஷ் (27), மகாதேவன் (30), ஆனந்த் (24) உட்பட 7 பேரை கொலை செய்தது தெரியவந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (குடியுரிமை பாதுகாப்பு) நடந்து வந்தது.

இந்த வழக்கை நீதிபதி எஸ். ரவி விசாரித்து ராஜேஷ், மகாதேவன், ஆனந்த் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 10ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்புக்கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!