Skip to content
Home » வைகோ மீண்டும் மதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார்

வைகோ மீண்டும் மதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார்

ம.தி.மு.க. உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த பலர்  போட்டியிட வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.. வேட்புமனுவை திரும்ப பெற ஜூன் 1-ந்தேதி (இன்று) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் போட்டியின்றி தேர்வாகிறார். ஜூன் 3-ல் இதற்கான அறிவிப்பு வெளியாகிறது. மதிமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில் வைகோ போட்டியின்றி தேர்வாகிறார். தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!