Skip to content
Home » லாரி டூவீலர் மீது மோதி வாலிபர் பலி…. திருச்சியில் சம்பவம்….

லாரி டூவீலர் மீது மோதி வாலிபர் பலி…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி ,  காமலாபுரம் அருகே திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் திருமணம் ஆகி மலர் என்கிற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். தினமும் மாலையில் செவந்திப்பட்டிக்கு சென்று டீ குடித்து வருவது ரமேஷ் வழக்கம். வழக்கம்போல் டீ குடிக்க காமலாபுரம் செவந்திப்பட்டி சாலையில் சென்ற போது தொட்டியம் வட்டம் அரங்கூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பொன்னர் என்பவர் ஓட்டி வந்த  லாரி எதிர்பாராத விதமாக ரமேஷ் ஒட்டி வந்த டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் ரமேஷ்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் விரைந்து சென்று ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் , பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!