Skip to content
Home » டூவீலரில் இளம்பெண்ணுடன் பயணம்… ஹெல்மெட் அணியாததால் மனைவியிடம் சிக்கிய கணவன்…

டூவீலரில் இளம்பெண்ணுடன் பயணம்… ஹெல்மெட் அணியாததால் மனைவியிடம் சிக்கிய கணவன்…

கேரள மாநிலத்தில், தனது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட டூவீலரில் ஹெல்மெட் அணியாத நபர் ஒருவர் வேறு ஒரு பெண்ணுடன் பயணம் செய்துள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி பயணம் செய்ததால், இந்த புகைப்படங்கள் வாகனத்தின் உரிமையாளரான அவரது மனைவிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனது வாகனத்தில், தன்னுடைய கணவரின் பின்னால், வேறு ஒரு பெண் அமர்ந்திருப்பதைக் கண்ட மனைவி கடுங்கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், லிப்ட் மட்டுமே கொடுத்ததாகவும் கணவர் விளக்கமளித்துள்ளார். இதனை அவரது மனைவி மறுத்த நிலையில், பிரச்சினை தீவரமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தனது கணவர் தன்னையும், தனது 3 வயது குழந்தையையும் துன்புறுத்துவதாக புகாரளித்ததால், காவல்துறையினர் அப்பெண்ணின் கணவரை கைது செய்தனர். இந்நிலையில் ஹெல்மெட் அணியாத பயணம், தற்போது இருவருக்கும் இடையே விவாகரத்தை நோக்கி சென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!