Skip to content
Home » திருச்சியில் அரசு பஸ் டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்…..

திருச்சியில் அரசு பஸ் டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்…..

  • by Senthil

கரூர் மாவட்டம்  குளித்தலை பொய்யாமணியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது டூவீலரில் பெரியண்ணன் மித்ரன் ஆகியோருடன் திருச்சி -கரூர் சாலையில் சென்றுள்ளனர். அப்போது பெட்டவாய்த்தலை பஸ் ஸ்டாண்ட் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் டூவீலரில் பயணித்த 3 பேருமே நிலைதிடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் கோவிந்தராசு மீது பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!