Skip to content
Home » வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சி….சிக்கிய வாலிபர்…. திருச்சியில் சம்பவம்…

வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சி….சிக்கிய வாலிபர்…. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சி, லால்குடி அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ. வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் லால்குடி செம்பரையை சேர்ந்த மோகன்ராஜ் என்ற வாலிபர் கதவின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட முயற்சித்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதில் மோகன்ராஜ் தப்பி ஓ முயன்றுள்ளார். இதையடுத்து கையும் களவுமாக மோகன்ராஜ்-ஐ பிடித்து லால்குடி போலீஸ் ஸ்டேசனில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். கொள்ளை முயற்சி ஈடுபட்ட மோகன்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!