Skip to content
Home » திருச்சி டாஸ்மாக்கில் கத்திமுனையில் மதுபாட்டில் கொள்ளை…. வாலிபர்கள் கைது…

திருச்சி டாஸ்மாக்கில் கத்திமுனையில் மதுபாட்டில் கொள்ளை…. வாலிபர்கள் கைது…

திருச்சியில் கடந்த 18.12.22-ந்தேதி திருச்சி காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சை நகர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடைக்குள் புகுந்து அருவாளை காட்டி மிரட்டி மது பாட்டில்களை கொள்ளையடிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, ரவுடிகளை பிடிக்க திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில்  திருச்சி, பாலக்கரை பகுதிகளில் CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் பகுதியில் சந்தேகத்திற்குகிடமான வகையில் டூவீலரை ஓட்டி வந்த 2 நபரை நிறுத்தி விசாரணை செய்தபோது, விசாரணையில் பாலக்கரையை சேர்ந்த ஜீட் ஆண்டனி( 19)  மற்றும் இன்னொரு நபர் என 2 ரவுடிகளை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணையில்  மதுபான கடையில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதி மற்றும் காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் புகுந்து ஆயுதத்தை காண்பித்து மது பாட்டில்களை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களின் டூவீலர் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. மேலும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இதனைதொடர்ந்து திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர கமிஷனர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!