Skip to content
Home » திருச்சியில் கொள்ளையன் மீது குண்டாஸ்…..

திருச்சியில் கொள்ளையன் மீது குண்டாஸ்…..

  • by Senthil

திருச்சியில் கடந்த 01.12.22-ம் தேதி அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்டி திடீர் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்களை திருட்டு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதே பகுதியை சேர்ந்த கணேஷ் @ திடீர் நகர் கணேஷ் (22) என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் ரவுடி கணேஷ் @ திடீர் நகர் கணேஷ் மீது சிறுவனை கடத்தி கொலை செய்ததாக ஒரு வழக்கும், சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக ஒரு வழக்கும். வழிப்பறி மற்றும்  டூவீலர் திருடியதாக ஒரு வழக்கு உட்பட கணேஷ் மீது 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததது.

எனவே, கணேஷ் @ திடீர் நகர் கணேஷ் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதும், கத்தியை காட்டி பணம் பறிப்பது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால் அவரின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக ரவுடி கணேஷ் மீது குண்டாசில் கைது செய்ய திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ரவுடி கணேஷை குண்டாசில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி மாநகரில் இதுபோன்ற திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர கமிஷனர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!