Skip to content
Home » திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….. படங்கள்…

திருச்சியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….. படங்கள்…

  • by Senthil

திருச்சியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்க நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றுப்பணிகள் திருச்சியில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மதுரை சாலையில் உள்ள கிராப்பட்டி பகுதியில் இருபுறம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி உதவி செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற போது

பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பேச்சு வார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது என தெரிவித்ததையடுத்து நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!