Skip to content
Home » குடும்ப தகராறு… திருச்சியில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை…

குடும்ப தகராறு… திருச்சியில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய சூசை. (34). இவருக்கும் அபிலா ஜோன்ஸ் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. இதுதொடர்பாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்நிலையில் வீட்டில் மரியசூசை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.  இது குறித்த புகாரின் பேரில் திருச்சி பலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!