Skip to content
Home » காரில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்…. திருச்சியில் 2 வாலிபர்கள் கைது…

காரில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்…. திருச்சியில் 2 வாலிபர்கள் கைது…

  • by Senthil

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் மற்றும் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து திருச்சி கோணக்கரையில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை  மேற்கொண்டனர்.  விசாரணையில் அவர்கள், திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த முகமது நிம்தியாஸ் (23), சரத் என்ற ரத்தினசாமி (23) என்பது தெரியவந்தது. இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!