Skip to content
Home » மோதல் விவகாரம்.. திருச்சி திமுக நிர்வாகிகள் 4 பேர் போலீசில் சரண்…

மோதல் விவகாரம்.. திருச்சி திமுக நிர்வாகிகள் 4 பேர் போலீசில் சரண்…

  • by Senthil

திருச்சியில் இன்று காலை அமைச்சர் நேரு  ராஜா காலனியில்  உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு சென்றபோது திடீரென அங்குள்ள திருச்சி சிவா  எம்.பியின் வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த ஆதரவாளர்கள் 3 பேர் அமைச்சரின் காரை  மறித்து கருப்புகொடி காட்டினர். இதனால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர் அதிர்ச்சி அடைந்தனர்.  திமுகவில் உள்ள நபர்களே நடந்துக்கொண்ட விதத்தால் கொந்தளித்த நேருவின் ஆதரவாளர்கள் திடீரென சிவா எம்.பி வீட்டுக்குள் புகுந்து  அங்கிருந்த கார், பைக், நாற்காலிகளை அடித்து உடைத்தனர். அமைச்சருக்கு கருப்புகொடி காட்டிய நபர்கள் சிலரை கோர்ட் போலீசார்  பிடித்து சென்றனர். அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்ற திமுகவினர் சிலர் ஸ்டேஷனுக்குள் புகுந்து அவர்களை தாக்கினர். இந்த சம்பவங்கள் தொடர்பாக வட்ட செயலாளர் மூவேந்தன் கொடுத்த புகாரின் பேரிலும்  சிவா ஆதரவாளர் சூர்யகுமார் கொடுத்த புகாரின்பேரில் 15 பேர் மீதும் கோர்ட்  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சிவா தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் இன்று  மாலை கண்டோன்மெண்ட் போலீசில் சரண் அடைந்தனர். இந்த நிலையில் சம்மந்தப்பட்ட 4  பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!