Skip to content
Home » திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்….

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்….

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமதாஸ் வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட இணை செயலாளர் தௌலத் உசேன் கான், துணை தலைவர் சையது சுல்தான் மக்தூம் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் செந்தமிழ் செல்வன், மாவட்ட தலைவர் சிராஜுதீன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மீது துறை ரீதியான விசாரணைகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடித்து விட வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிடப்பட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மாவட்ட பொருளாளர் மாணிக்கம் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!