Skip to content
Home » திருச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு….

திருச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு….

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஜம்புமடை ஊராட்சி, ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். பின்னர் வகுப்பறைக்குச் சென்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இதனைதொடர்ந்து  மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், சண்முகப் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குணசேகரன்,

மனோகரன் உதவிப்பொறியாளர் ஜெயசுதா, ஒன்றியக் குழுத்துணைத் தலைவர் மல்லிகா பெரியசாமி, ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். உணவு பொருட்களின் தரம் குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆகியயோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!