Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை….அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை….அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…

  • by Senthil

தமிழக முதல்வர் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி வருகை தருவதை முன்னிட்டு திருச்சி அண்ணா விளையாட்டர ங்கம், மொண்டிப்பட்டி, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை நகராட்சி

 

நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், எம்எல்ஏக்கள் ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன், தொடர்புடைய அரசுத்துறை உயர் அலுவலர்கள், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!