திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்தவர் வௌ்ளையன் (70). இவர் 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அச்சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த தாய் சிறுமியை திருச்சி ஜிஎச்-க்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது. இதனைதொடர்ந்து சிறுமியின் தாயார் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார் . இப்புகாரின் அடிப்படையில் ஜீயபுரம் போலீசார் முதியவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை…. திருச்சியில் முதியவர் மீது வழக்கு…
- by Authour
