Skip to content
Home » கார் டூவீலர் மீது மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

கார் டூவீலர் மீது மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(20). இவர் தனது  டூவீலரில் திருச்சி, லால்குடி, அரியூர் பகுதியில் சென்றபோது இவருக்கு எதிரே வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணிகண்டனின் உறவினர் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் விபத்தை ஏற்பத்திய கார் டிரைவரான திருமணமேடு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!