Skip to content
Home » போலீசார் தாக்கி இறந்த நபர்…. 50 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சியில் முற்றுகை….

போலீசார் தாக்கி இறந்த நபர்…. 50 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சியில் முற்றுகை….

அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டையை சேர்ந்தவர் செம்பலிங்கம் (54 ). இவருக்கு மனைவி- மகன்- மகள் ஆகியோர் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் அரியலூரில் கடந்த மாதம் 26 ம் தேதி நடந்த ஒரு அடிதடி வழக்கில் அவரது மருமகன் மணிகண்டன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இது தொடர்பாக விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது செம்பலிங்கம் மற்றும் அவர் குடும்பத்தினரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசார் தாக்கியதில் படுகாமடைந்த செம்புலிங்கம்

அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் வீடு திரும்பினார். இருப்பினும் அவரது உடல்நிலை சரியாகததால் நேற்று செம்பலிங்கள் திருச்சி மாருதி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செம்பலிங்கம் உயிரிழந்தார். இதில் ஆவேசமடைந்த அவரது உறவினர்கள் தற்போது ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!