Skip to content
Home » திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Senthil

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஒரு ஆண் பயணி கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்தபோது தங்க நிறத்தில் சாயம் பூசப்பட்ட லுங்கியை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த லுங்கியை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்திய போது அதில் தங்கத்தை கலந்து சாயம் பூசப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த லுங்கியில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்தனர். அதில் சுமார் 128 கிராம் எடையிலான தங்கம் இருந்தது. அதன் மதிப்பு 6 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டது. தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த ஆண் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!