Skip to content
Home » திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்த டிரைவர் கைது….

திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2வது திருமணம் செய்த டிரைவர் கைது….

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் ரங்கசாமி (29) டிராக்டர் டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். இந்நிலையில் இவர் காமராசவல்லி கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் தமிழ்ச்செல்வி (21) இவர் 9 -ஆம் வகுப்பு படித்துவிட்டு திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்திருக்கிறார் .இவரை ரங்கசாமி குடும்பத்தினர் நேரில் சென்று திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழ்செல்வியை அழைத்துச் சென்று அவசர அவசரமாக கடந்த மே மாதம் 22-ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். தமிழ்ச்செல்வியிடம் தனக்கு முதலில் திருமணம் நடந்ததை கூறாமல் மறைத்து திருமணம் செய்துள்ளது தமிழ்ச்செல்விக்கு தற்போது தான் தெரிய வந்தது.

இதைப்பற்றி ரங்கசாமியிடம் தமிழ்ச்செல்வி கேட்டபோது தகாத வார்த்தைகள் திட்டி இனி மேல் இதைப் பற்றி பேசினால் கொலை செய்து விடுவதாக தமிழ்ச்செல்வியை மிரட்டி உள்ளார். இது குறித்து தமிழ்ச்செல்வி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்தும் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார். மேலும் ரங்கசாமியின் முதல் மனைவிக்கும், ரங்கசாமிக்கும் இதுவரை டைவர்ஸ் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் திருமணத்தை மறைத்து இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த டிராக்டர் டிரைவரின் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!