Skip to content
Home » திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி மனைவி பலி…. கணவர்-குழந்தை படுகாயம்..

திருச்சி அருகே டூவீலர் மீது கார் மோதி மனைவி பலி…. கணவர்-குழந்தை படுகாயம்..

திருச்சி மாவட்டம், மாடக்குடி சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்( 28). இவரது மனைவி சாந்தி(23).2 பேரும் குழந்தையுடன்,  டூவீலரில், திருச்சி- சென்னை புறவழிச்சாலை வழியே சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் மகேஷ் சென்ற டூவீலர் மீது மோதி, சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கம்பியையும் உடைத்துக்கொண்டு பாய்ந்தது. இதில் டூவீலரில் சென்ற 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். சிறிது நேரத்தில் சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். மகேஷ் மற்றும் குழந்தை ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்’கு அனுப்பி வைத்தனர் . மேலும் படுகாயமடைந்த குழந்தை மற்றும் மகேஷ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் விசாரணையில்  காரில் பயணித்த திருச்சி பாலக்கரையை சேர்ந்த அகமதுல்லா(23), தென்னூரை சேர்ந்த சேக்பரி(27), உள்ளிட்டோர்  என தெரியவந்தது. சென்னையைச் சேர்ந்த இஷான்தீன் (26) காரை ஓட்டியுள்ளார். இந்த விபத்து நடந்த போது, அணுகு சாலையில் பிற வாகனங்கள் ஏதும் செல்லாததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!