Skip to content
Home » புயல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைப்பு….

புயல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைப்பு….

  • by Senthil

சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 170 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது எனவும், இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டனர். இந்த நிலையில் வனத்துறை சார்ந்த பணிகளுக்கு நாளை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் அறிவித்துள்து. இதேபோன்று, இந்த தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!