Skip to content
Home » திட்ட விளக்கக் கண்காட்சியை பார்வையிட்ட திருச்சி கலெக்டர்….

திட்ட விளக்கக் கண்காட்சியை பார்வையிட்ட திருச்சி கலெக்டர்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம்,  திருவெள்ளரை ஊராட்சியில், மாவட்ட கலெக்டரின் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழாவில் 505 பயனாளிகளுக்கு ரூபாய் 53.21 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று வழங்கினார். மேலும் அரசுத் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களின் பார்வைக்கு அமைக்கப்பட்ட திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளை

பார்வையிட்டார். இந்நிகழ்வில், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு.வைத்தியநாதன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் .செல்வம், வட்டாட்சியர்  .சக்திவேல் முருகன், திருவெள்ளரை பஞ்சாயத்து ஊராட்சி மன்றத்தலைவர்  .லதா கதிர்வேல், ஒன்றியகுழு உறுப்பினர் திரு.கண்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!