Skip to content
Home » திடீர் சூசையப்பர் சிலை.. திருச்சி அருகே பதற்றம்..

திடீர் சூசையப்பர் சிலை.. திருச்சி அருகே பதற்றம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவைசேர்ந்த பொதுமக்கள் இன்று  புதிதாக சூசையப்பர் சிலையை வைத்துள்ளனர்.  இச்சம்பவம் குறித்து பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் பனைய குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவியின் கணவர் பார்த்தசாரதி ஆட்கள் உடன் இன்று அதிகாலை சென்று சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த சிலையை அகற்ற  முயன்றதாக கூறப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தரப்பிற்கும் மாதா கோவில் திறப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவிலகன் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்த பகுதியில் இருந்த மாதா கெவி கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊராட்சி இடத்தில் இருப்பதாக கூறி நீதிமன்ற உத்தரவின் படி அகற்றினார்கள் அதற்கு மாதா கோவில் தெருவினர் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரை சந்தித்து முறையிட்டதோடு போராட்டம் நடத்தி வந்த நிலையில் மீண்டும் அந்த பகுதியில் புதிதாக வைக்கப்பட்ட சூசையப்பர் சிலை அகற்ற முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!