Skip to content
Home » திருச்சி அருகே இன்று அதிகாலை லாரி- ஆம்னி மோதி விபத்து .. 6 பேர் பலி..

திருச்சி அருகே இன்று அதிகாலை லாரி- ஆம்னி மோதி விபத்து .. 6 பேர் பலி..

  • by Senthil

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து கும்பகோணத்திற்கு கோவிலுக்கு செல்வதற்காக திருச்சி வழியாக ஆம்னி வேனில் குழந்தை உள்பட 9 பேர் பயணம் செய்தனர்.இதேபோன்று மரக்கட்டைகளை லாரியில் ஏற்றுக் கொண்டு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்றபோது மண்ணச்சநல்லூர் அருகே திருவாசியில்  சென்ற போது இன்று அதிகாலை 3.50 மணிக்கு வந்த ஆம்னி வேணும், லோடு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு குழந்தை, ஒரு பெண்,உட்பட 4 ஆண்கள் என ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாப பலியாகினர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வாத்தலை போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3 பேரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் நேரில் சென்று விபத்து குறித்து ஆய்வு செய்தார். இந்த விபத்தினால் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது போலீசார்  அப்பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!