Skip to content
Home » தஞ்சை அருகே புயல் முன் எச்சரிக்கை கூட்டம்…

தஞ்சை அருகே புயல் முன் எச்சரிக்கை கூட்டம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே அம்மாபேட்டை ஒன்றியம், கொத்தங்குடி ஊராட்சியில் புயல் முன் எச்சரிக்கை கூட்டம் நடந்தது. சாத்தனூர் சேவை மையத்தில் நடந்த கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் பழனி, துணைத் தலைவர் குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் கொத்தங்குடி மகாபிரபு, உதாரமங்களம் கருப்புசாமி, மின் ஊழியர் இளையராஜா உட்பட முன் கள பணியாளர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர். இதில் புயல் தொடர்பான முன் எச்சரிக்கை விழிப்புணர்வு கிராம மக்களிடையே ஏற்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!