Skip to content
Home » வீடு எரிந்து சேதம்… உரிமையாளருக்கு நலத்திட்ட உதவி…. தஞ்சையில் சம்பவம்…

வீடு எரிந்து சேதம்… உரிமையாளருக்கு நலத்திட்ட உதவி…. தஞ்சையில் சம்பவம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத்துறை காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் ( 40).  இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் மின் கசிவின் காரணமாக திடீரென தீப்பிடித்து  எரிந்தது. உடனடியாக தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீட்டில்  ரூ. 80 ஆயிரம் பணம், 2 ல ட்சம் மதிப்பில் வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் துரைமுருகன்,  பாபநாசம் பேரூர் திமுக செயலாளர் கபிலன் ஆகியோர் ஒரு மூட்டை அரிசி, மளிகை பொருட்கள், போர்வை, ரொக்க பணம் ஆகியவற்றை வழங்கினார்கள்.  உடன் பேரூராட்சி கவுன்சிலர் கீர்த்திவாசன், பாபநாசம் பேரூர் திமுக துணைச் செயலாளர் சின்ன உதயகுமார் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!