தஞ்சையில் நாளை, மாவட்ட மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தேர்வு நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் காளிதாஸ் வாண்டையார் தெரிவித்துள்ளதாவது…
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன், தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் மாவட்ட மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தேர்வு நாளை மதியம் 1 மணிக்கு பரிசுத்தம் நகரில் உள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
விருப்பம் உள்ள 21.5.1999-க்கு பிறகு 21.5.2010-க்கு முன் வரை பிறந்தவர்கள் உரிய பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் தொடர்புக்கு 9363374174, 9940946946, 9994300671 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.