Skip to content
Home » தஞ்சை மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

தஞ்சை மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

தஞ்சாவூரில் மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் செந்தில்நாதன் பேசினார். ரயிலடி கிளையைச் சேர்ந்த 40 ஆட்டோ தொழிலாளர்கள் ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். ரயிலடி கிளை தலைவராக கிருஷ்ணன், செயலாளராக ராஜா, பொருளாளராக சுதாகர், துணைத் தலைவராக முனியாண்டி, துணை செயலாளராக முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையா, பொருளாளர் கோவிந்தராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து சம்மேளன மாநில துணை தலைவர் துரைமதிவாணன், நுகர் பொருள் வாணிப கழக சங்க மாவட்ட பொருளாளர் தியாகராஜன் உட்பட பலர் பேசினர். பொருளாளர் மலைச்சாமி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!