Skip to content
Home » தஞ்சை அருகே காங்., கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்….

தஞ்சை அருகே காங்., கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்….

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இலுப்பக்கோரை, அய்யம்பேட்டை, தியாகசமுத்திரம் ஆகிய பகுதிகளில்
தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லோகநாதன் தலைமையில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கலந்துகொண்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி

மையங்களில் கட்சி நிர்வாகிகளை நியமித்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும், பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக போட்டியிட்டாலும் அல்லது காங்கிரஸ் போட்டியிட்டாலும் ஒற்றுமையுடன் சேர்ந்து வெற்றிக்கு அயராது தொண்டர்கள் பாடுபட வேண்டும் என பேசினார். இதில் வட்டாரத் தலைவர்கள், நகரத்தலைவர்கள், செயலாளர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!