Skip to content
Home » இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல்…. தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி…

இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல்…. தேங்காய் விவசாயிகள் மகிழ்ச்சி…

  • by Senthil

தஞ்சாவூர் விற்பனை க் குழு, கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேங்காய் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் சார்பில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் மறைமுக ஏல முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று கொள்முதல் பரிவர்த்தனை நடைப் பெற்று வருகிறது.
அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூர் பகுதி விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் சுமார் 300 தேங்காய் கொள்முதல் பரிவர்த்தனை நடைப் பெற்றது.

இதில் தேங்காய் ஒரு குவிண்டால் அதிகபட்ச விலையாக ரூ.2300/ க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.2100/க்கும் பரிவர்தனை செய்யப்பட்டது. இதேபோல் விவசாயிகளின் இடத்திற்கே சென்று பரிவர்த்தனை செய்யப்படுவதால் போக்குவரத்து செலவு, ஏற்று கூலி, இறக்கு கூலி, கால விரயம் போன்ற செலவினங்கள் தவிர்க்கப்படுகிறது.
மேலும் தேசிய வேளாண் மின்னணு திட்டத்தில் விற்பனை செய்யப்படுவதால் நல்ல விலையும், உடனடி பணமும் கிடைக்கின்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!