பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் காதலர்கள் சந்தித்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறி கொள்வார்கள். மேலும் ஆட்டம், பாட்டம் என கோலாகலமாக கொண்டாடுவார்கள். காதலில் உச்சம் தொட நினைப்பவர்கள் அன்று உல்லாசமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தேவையில்லாத கருவுருதல், மற்றும் தொற்றுகள் பரவுதல் போன்ற வை ஏற்படலாம். இவற்றை தடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கடமை என்ற போதிலும் அரசுக்கும் இதில் பங்கு உள்ளது.
அந்த வகையில் தாய்லாந்து அரசு இப்படிப்பட்ட சூழ்நிலைகளை எளிதில் கையாளவும், காதலர்களை பாதுகாக்கவும் காதலர் தினத்தை முன்னிட்டு விநோத பரிசைஅறிவித்துள்ளது. அதாவது காதலர் தினத்தையொட்டி 9 கோடியே 50 லட்சம் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
பாலியல் தொற்று பரவல் மற்றும் இளம் வயதில் கருவுருதல் போன்ற பிரச்சினைகளுக்கு பாதுகாப்பாக ஆணுறைகள் வழங்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் விரும்பிய அளவும் ஆணுறைகளை வாங்கி கொள்ளலாம் எனவும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் இலவச ஆணுறைகள் கிடைக்கும் என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.