Skip to content
Home » கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

கால்நடை பயிற்சி மருத்துவர் தூக்கு போட்டு தற்கொலை…

சென்னை மதுரவாயல் காமாட்சி நகர் முதல்தெருவை சேர்ந்தவர் பத்மநாதன். இவரது மகன் வசந்த் சூர்யா (23). ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் ரெட்டிபாளையம் நால்ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார். நேற்று இரவு வசந்த்சூர்யா மற்றும் சதீஷ்குமார், சிவராஜ் ஆகிய 3 பேரும் மருத்துவமனையில் தங்கி இருந்தனர். இதில் சதீஷ்குமார், சிவராஜ் இருவரும் உள்ளே ரூமிலும், ஹாலில் வசந்த்சூர்யாவும் படுத்து இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த மருத்துவமனை வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள ஷெட்டில் ஒருவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் கள்ளப்பெரம்பூர் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கள்ளப்பெரம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் தூக்கு மாட்டி இறந்து கிடந்தவர் வசந்த் சூர்யா என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வசந்த் சூர்யாவுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவருக்கும், அவருடைய தந்தைக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். நேற்று இரவும் வசந்த் சூர்யா மது அருந்தி இருக்கிறார். இந்நிலையில் சதீஷ்குமார் மற்றும் சிவராஜ் இருவரும் தூங்க சென்ற பின்னர் மருத்துவமனைக்கு வெளியில் இருந்த ஷெட்டில் வசந்த் சூர்யா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து வசந்த்சூர்யாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது பெற்றோருக்கும் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!