Skip to content
Home » நிலுவை தொகை கேட்டு கலெக்டர் ஆபீஸ் முற்றுகை…… தஞ்சையில் 300 விவசாயிகள் கைது

நிலுவை தொகை கேட்டு கலெக்டர் ஆபீஸ் முற்றுகை…… தஞ்சையில் 300 விவசாயிகள் கைது

கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன் பேட்டி: தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி, திரு ஆருரான் சர்க்கரை ஆலை கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்படவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் ஆலையை மூடிவிட்டனர். விவசாயிகளின் பெயரில், வங்கிகளில் 300 கோடி ரூபாய் கடனை வாங்கிக் கொண்டு, விவசாயிகளை கடனாளியாகி விட்டனர். தற்போது கால்ஸ் நிறுவனம் ஆலையை வாங்கி உள்ளது. ஆனால் விவசாயிகளின் பிரச்சனையை புதிய நிர்வாகம் தீர்க்கவில்லை. பழைய ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையும் வழங்கவில்லை, விவசாயிகள் பேரில் வங்கியில் வாங்கிய கடன் தொகையும் செலுத்த மறுத்து வருகின்றனர்.

விவசாயிகளை கடனாளியாக தெருவில் நிறுத்தி உள்ளனர். இதில் 15000 கரும்பு விவசாயிகளின் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடந்து வருகிறது. ஆலை நிர்வாகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ள நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினோம். கடந்த அதிமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியிலாவது நீதி கிடைக்குமா என போராடி வருகிறோம். அரசு இந்த பிரச்சினையில் தலையிடவில்லை. விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி மோசடி செய்த மோசடி பேர்வழி இன்று வெளியில் உள்ளார் அவரை கைது செய்யவில்லை. விவசாயிகளின் பெயரில் உள்ள கடன் தொகையை மாநில அரசு, புதிய ஆலை நிர்வாகத்தின் பெயரில் மாற்றிவிட்டு, விவசாயிகளை கடனிலிருந்து விடுவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்து மாநில அரசு பெற்றுத்தர வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இந்த பிரச்னை தொடர்பாக  விவசாயிகள் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை  போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகis  தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார்  கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!