Skip to content
Home » தமிழறிஞர்களுக்கு விருது….. முதல்வர் வழங்கினார்

தமிழறிஞர்களுக்கு விருது….. முதல்வர் வழங்கினார்

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், 10 தமிழறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2022ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதினை கவிஞர் கலி.பூங்குன்றனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2022ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதினை எஸ்.வி. ராஜதுரைக்கும், முதல்வர் வழங்கி சிறப்பித்தார். இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா 5 லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.

இந்த விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,  சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!