Skip to content
Home » விவசாயிகள் ஒற்றை காலில் நின்று 11வது நாளாக போராட்டம்….

விவசாயிகள் ஒற்றை காலில் நின்று 11வது நாளாக போராட்டம்….

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடிஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில் பெற்ற ரூ . 300 கோடி வங்கி கடனைத் தீர்க்க வேண்டும். விவசாயிகளின் கரும்பு கிரயத்தில் பிடித்தம் செய்யப் பட்ட பயிர்க் கடன் தொகையை வங்கியில் செலுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவித்த கரும்பிற்கான முழுத் தொகை மற்றும் 5 ஏ பிரைஸ் முழுவதையும் வட்டியுடன் ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வெட்டுக் கூலி, வாகன வாடகை முழுவதையும் வட்டியுடன் ஒரே தவணையில் வழங்க வேண்டும். உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. கடந்த 30 ந் தேதி முதல் நடைப் பெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் எலியை வாயில் கவ்வியபடியும், தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டும், வாயில் கறுப்பு துணி கட்டிக் கொண்டும், நாமம் போட்டுக் கொண்டும், கோவணம் அணிந்து மண்சட்டி ஏந்தி பிச்சை எடுத்தப் படியும், எருமை மாட்டிடம் மனு கொடுத்தும், தண்டோரா அடித்தும் தினம் தினம் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 11வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்றது. இதில் விவசாயிகள் ஒற்றை காலில் நின்றப்படி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!