Skip to content
Home » மாணவியை பூங்காவிற்கு வரவைத்து 5 மாணவர்கள் கூட்டு பலாத்காரம்….

மாணவியை பூங்காவிற்கு வரவைத்து 5 மாணவர்கள் கூட்டு பலாத்காரம்….

பஞ்சாப் மாநிலத்தில் சண்டிகர் பகுதியில் வசித்து வரும் அந்த மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.  அந்த மாணவி படித்து வரும் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மூன்று மாணவர்கள் மேலும் அதே பள்ளியில் படித்து வரும் இன்னும் இரண்டு பேர் சேர்ந்து அந்த மாணவியை மாணவியை மீது கண் வைத்து வந்திருக்கிறார்கள்.

அந்த மாணவியை எப்படியும் கூட்டு பலாத்காரம் செய்ய வேண்டும் என்று அந்த மாணவர்கள் தொடர்ந்து திட்டமிட்டு வந்திருக்கிறார்கள் அவர்கள் திட்டமிட்டபடி அந்த மாணவியை மிரட்டி பள்ளி முடிந்ததும் அதே பகுதியில் இருக்கும் பூங்காவிற்கு வரச் சொல்லி இருக்கிறார்கள்.  அவர்களின் மிரட்டலுக்கு பயந்த அந்த மாணவி அவர்கள் சொன்னபடியே பள்ளி முடிந்ததும் அந்த பூங்காவிற்கு சென்றிருக்கிறார்.

அங்கே சென்றதும் ஒதுக்கு புறமாக இடத்தில் வைத்து அந்த ஐந்து மாணவர்களும் அந்த மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து இருக்கிறார்கள் . இதில் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த மே 18ஆம் தேதி அன்று தனது வகுப்பு ஆசிரியரிடம் நடந்தவற்றைச் சொல்லி அழுது இருக்கிறார்.  இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் சக ஆசிரியர்களிடம் சொல்ல, அவர்கள் அனைவரும் தலைமை ஆசிரியரிடம் சென்று முறையிட்டு இருக்கிறார்கள்.

இதன் பின்னர் குழந்தைகள் உதவி  மையத்திற்கு புகார் தெரிவிக்க பள்ளிக்கு வந்த சைல்டு லைன் குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவியையும் அவரின் தாயாரையும் வர வைத்து விசாரித்து இருக்கிறார்கள்.  இதற்கு பின்னர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள்.   போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அந்த மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த ஐந்து சிறுவர்கள் மீதும் ஆறு பிரிவுகள் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில் இருந்தும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள்.  நீதிபதியின் உத்தரவை அடித்து ஐந்து மாணவர்களையும் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!