Skip to content
Home » சிலை கடத்தல் மன்னன் உயிரிழந்தார்…..

சிலை கடத்தல் மன்னன் உயிரிழந்தார்…..

  • by Senthil

கலைப்பொருட்கள் விற்பனை மையம் என்ற போர்வையில் மறைமுகமாக சிலைக்கடத்தல் வேலைகளை செய்து வந்த கும்பலில் முக்கியமானவர் தீனதயாளன். கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் டிஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் இல்லத்தில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் புதைக்கப்பட்டிருந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட சிலைகள், ஓவியங்களை அதிகாரிகள் மீட்டனர். மேலும் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் வழக்கிலும் இவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த சிலை கடத்தல் மன்னன் என்று அழைக்கப்படும் தீனதயாளன் இன்று உயிரிழந்தார். கடந்த இரண்டு ஆண்டு காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தீனதயாளன் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 83. தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் உள்ள சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்த வழக்கல் தீனதயாளன் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அப்ரூவராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!