Skip to content
Home » தை அமாவாசை… தர்ப்பணத்திற்காக காவிரி கரைகளில் குவிந்த மக்கள்…. படங்கள்….

தை அமாவாசை… தர்ப்பணத்திற்காக காவிரி கரைகளில் குவிந்த மக்கள்…. படங்கள்….

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக திருச்சி மட்டுமல்லாமல் திருச்சி அரியலூர் பெரம்பலூர் கரூர் புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் கூடி தங்களது முன்னோர்களுக்கு தை,ஆடி,புரட்டாசி உள்ளிட்ட அமாவாசை நாட்களில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அந்த வகையில் இன்று தை அமாவாசை என்பதால் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் ஏராளமான மக்கள் ஒன்று கூடி வாழை இலை,பூஜை பொருட்கள்,அகத்தி கீரை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி சென்று ஆர்வமுடன் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.


மேலும் கரூர் மாவட்ட காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் மாயனூர், குளித்தலை, நெரூர்,வாங்கல் உள்ளிட்ட ஆற்றங்கரையில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

அப்போது தர்ப்பணத்திற்கு வந்த பலரும் தங்களது மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயரை கூறி தர்ப்பணம் செய்தனர்.

அதன்பின்பு அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு சென்றனர்.

பின்னர் வீடுகளுக்கு வந்ததும் முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படையல் இட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!