Skip to content
Home » ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

  • by Senthil

மார்கழி மாதம் என்றாலே பல்வேறு ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதுவும் குறிப்பாக பெருமாள், அம்மன் மற்றும் விநாயகர் ஆலயங்களில் இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்ற ஒரு நிலையில் கரூர் நகரப் பகுதியான அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கு மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு விநாயகருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை ஆலய நிர்வா கிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!