Skip to content
Home » வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் பெற்ற எஸ்ஐ உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட்

வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் பெற்ற எஸ்ஐ உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட்

  • by Senthil

சென்னையை அடுத்த செங்குன்றம் போலீஸ் ஸ்டேஷனக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், கடந்த 15 நாட்களுக்கு முன்னர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தில் அரியவகை உராங்குட்டான் குரங்குகளை கடத்திக்கொண்டு வந்த கும்பலை அவர்கள் மடக்கி பிடித்தனர்.  அந்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக, லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு போலீசார் அவர்களை தப்பியோட விட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, காவல்துறை உயர் அதிகாரிகளின் விசாரணையில், அரியவகை உராங்குட்டான் குரங்குகள் கடத்தலில், சம்பந்தப்பட்ட கும்பலிடம் செங்குன்றம் எஸ்ஐ அசோக், காவலர்கள் வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, வழக்குப்பதிவு செய்யாமல் தப்பியோட விட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!