Skip to content
Home » மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர்…..கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதால் திருச்சி வாலிபர் பலி….

மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர்…..கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதால் திருச்சி வாலிபர் பலி….

  • by Senthil

திருச்சி அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த ராஜேந்திரன்  மகன் செல்வராஜ் (27) இவர் மாமியார் இன்னாசியம்மாள்(40) வீட்டில்மனைவி டயானா மேரியுடன் (22) வசித்துவந்துள்ளார். செல்வராஜ் தினமும் குடிக்கும் பழக்கம் உள்ளவர்.

செல்வராஜ் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மாமியாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 5ம் தேதியும்  செல்வராஜ் போதையில் வந்து மாமியாரிடம் தனது சில்மிஷத்தை காட்டத்தொடங்கினார்.

இதனால் மனம் வெறுத்துப் போன  மனைவி டயானா மேரியும்,  மாமியார் இன்னாசி அம்மாளும் சேர்ந்து  தண்ணீரை கொதிக்கவைத்து அதில் மிளகாய் பொடியை கலந்து  போதை மருமகன் மீது ஊற்றிவிட்டனர்.

இதில் செல்வராஜ உடல் முழுவதும் வெந்து போனது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்வராஜை காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சைக்கு பலன் இல்லாமல் இன்று காலை பறிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஏற்கனவே திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து டயானா மேரியையும் இன்னாசி அம்மாளையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் செல்வராஜ் இறந்துள்ளதால் இந்த வழக்கை திருவெறும்பூர் போலீசார் கொலை வழக்கமாக மாற்றிவிசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!