Skip to content
Home » திருச்சியில் சார்விக்கு 1வது பிறந்த நாள் கொண்டாடிய குடும்பத்தினர்…

திருச்சியில் சார்விக்கு 1வது பிறந்த நாள் கொண்டாடிய குடும்பத்தினர்…

  • by Senthil

திருச்சி,தென்னூர், காம்ராஜ் நகரில் வசிக்கும் முருகன் வள்ளி தம்பதியினர் கடந்த 18-12-2021 முதல் ஆண் நாய்க்குட்டிக்கு (ஹிட்டு) மற்றும் பெண் நாய்க்குட்டிக்கு (சார்வி) எனப் பெயர் வைத்து இரண்டு நாய்க்குட்டிகளை வளர்த்து வருகின்றனர். ஹிட்டு,சார்வி எனப் பெயரிடப்பட்ட இரண்டு நாய்க்குட்டிகளுமே குடும்பத்தினரிடமும், வீட்டிற்கு வரும் உறவினர்கள்,விருந்தினர்களிடமும் அன்பாக பழகக்கூடியது.இன்று 18-12-2022 நாய்க்குட்டிகளுக்கு 1

வயது நிறைவடைவதையொட்டி கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினர். தன் பிள்ளைகளைப் போல செல்லப்பிராணிகளுக்கு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாடியது அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களிடையே வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!